தலைப்புச் செய்திகள்


BSNLEU காரைக்குடி மாவட்டச் சங்கம் தங்களை வணங்கி வரவேற்கிறது!
தங்களின் தோழமையுள்ள,
M.பூமிநாதன்
, மாவட்டச் செயலர்
P.மகாலிங்கம், மாவட்டத் தலைவர்

Wednesday 31 December 2014

                            
வெற்றி!        வெற்றி!!       வெற்றி!!!

நமது பிரதான கோரிக்கையான
முறையற்ற மாற்றல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால்,
தூத்துக்குடியில் நடைபெற இருந்த
மாநில செயலரின் உண்ணா விரத போராட்டம்
விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.
போராட்ட களம் காண தயார் நிலையில் இருந்த தோழர்களுக்கும்,
பிரச்சனை தீர்வு காண உதவிய மாநில நிர்வாகத்திற்கும்
காரைக்குடி மாவட்ட சங்கத்தின் வாழ்த்துக்கள்!

Monday 29 December 2014

மாநிலச்செயலர் உண்ணாவிரதம்

தூத்துகுடி நிர்வாகத்தின்
தன்னிச்சையான சர்வதிகார போக்கை கண்டித்தும்,
ஊழியர் விரோதப்போக்கை கண்டித்தும்
30-12-2014 அன்று
நமது மாநில செயலர்
தோழர்.அ.பாபுராதாகிருஷ்ணன் அவர்கள்
உண்ணாவிரதம் இருக்க உள்ளார்.
உண்ணாவிரதம் போராட்டம் வெல்லட்டும் !
வெற்றி பெற  மாவட்ட சங்கம் வாழ்த்துகிறது.

Tuesday 23 December 2014





அமெரிக்க உறவினால் சோசலிசக் கொள்கைகளை ஒருபோதும் விட்டுக் கொடுக்க மாட்டோம்- ரால் காஸ்ட்ரோ

ஹவானா, டிச.22-
அமெரிக்க உறவினால் சோசலிச கொள்கைகளை ஒருபோதும் விட்டுக் கொடுக்க மாட்டோம் என்று கியூபா ஜனாதிபதி ரால் காஸ்ட்ரோ திட்டவட்டமாக தெரிவித்து உள்ளார். அமெரிக்காவுக்கும், கியூபாவுக்கும் இடையே புதிதாக தூதரக உறவு ஏற்படுத்திக் கொள்ள சமீபத்தில் முடிவு செய்யப்பட்டு உள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா இந்த ஆண்டு நிறைவு செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசும்போது, அமெரிக்கா கியூபா இடையில் ஏற்பட்டுள்ள புதிய உறவினால், கியூபாவில் ஒரு கட்சி ஆட்சி முறையில் சீர்திருத்தம் கொண்டு வர முயற்சி செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.

இதற்கு பதில் அளிக்கும் வகையில் கியூபா ஜனாதிபதி ரால் காஸ்ட்ரோ நாடாளுமன்றத்தில் பேசும்போது, அமெரிக்க உறவினால் கியூபா ஒருபோதும் தனது சோசலிசக் கொள்கைகளையும், போராட்டத்தையும் விட்டுக் கொடுக்காது. இதேபோல் அமெரிக்காவும் தனது அரசியல் அமைப்பை மாற்ற வேண்டும் என்று கியூபா வலியுறுத்தாது. கியூபாவுக்கு எதிராக கடந்த 50ஆண்டுகளாக விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடையை விலக்க அமெரிக்கா முதலில் தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

Monday 22 December 2014

     FORUM OF BSNL UNIONS / ASSOCIATIONS

D-7, Telegraph Place, Gole Market, New Delhi – 110 001.


To
All General Secretaries of BSNL Unions/Associations
of Non-Executives and Executives

Sub: SAVE BSNL - Organising Three Days Dharna from 6 th to 8 thJanuary 2015

Dear Comrade,

As per the decision of the Forum, Three Days Dharna at SSA/Cirlce levels and at Corporate office is to be organised from 6th to 8th January 2015 jointly by the Forum affiliated unions/associations in support of our demands to the government and the BSNL Management on the issue of Revival of BSNL. It is in preparation for the Parliament March on 25th February and Indefinite Strike from 17th March 2015. During the period, a massive campaign among the workers and people has to be conducted and one crore signature to be collected on the Memorandum to be submitted to the Prime Minister on the day of the Parliament March on 25th February 2015.
     The Dharna has to be organised with massive participation in all the centres. Within the three days, we have to ensure that all the employees are involved, meaning, that every employee participates in Dharna at least one day. This will be a comitment of each and every worker to the action programme. One third of the workforce at least should be there in each day dharna.
Circulars and pamphlets be issued with details of our demands and agitation, which can be supplied to the public and other trade unions who visit the dharna site. The Forum leaders at Circle/District levels should contact leaders of fraternal unions and seek their support and solidarity. Signatures could be collected from people and members of fraternal unions during this period of dharna. Wide publicity should be given in the press about the demands and programme. Representatives of the
people like M.P.s, MLAs, Mayor, Councillors etc may be invited to inaugurate / address the dharna in support of our campaign to SAVE BSNL. Press Conference also can be conducted, wherever
feasible.
     The Three Days Dharna is a major campiagn programme, after the Lunch Hour Demonstration on 11 th December 2014 and has to be organised very effectively.
     It is requested that the General Secretaries give direction to their Circle Secretaries to initiate the preparations immediately in co-ordination with other Circle Secretaries.

Yours comradely,
VAN Namboodiri
Convener, Forum.

Saturday 20 December 2014


டிச.22-ல்    பாக்ஸ்கான் ஆலை நுழையும் போராட்டம்: சிஐடியு அறிவிப்பு

சென்னை, டிச. 19-
சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் எம்எல்ஏ, பொதுச்செயலாளர் ஜி.சுகுமாறன் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:சென்னைக்கு அருகில் செயல்பட்டுவரும் பன்னாட்டுநிறுவனமான பாக்ஸ்கான் சட்டவிரோதமாகஉற்பத்தியை நிறுத்திஆலையை மூடுவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு, தற்போது நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் சுமார் 1700 தொழிலாளர்களை டிசம்பர் 22 முதல் பணிக்கு வரக்கூடாது என்ற அறிவிப்பை செய்துள்ளது.
இத்தகைய சட்டவிரோத ஆலை மூடலை எதிர்த்து சிஐடியு தலைமையிலான பாக்ஸ்கான் இந்தியாதொழிலாளர் சங்கத்தின் சார்பில் எழுப்பப்பட்ட புகாரின் அடிப்படையில் தொழிலாளர் உதவி ஆணையர் முன்பு நடைபெற்ற பலகட்ட பேச்சுவார்த்தையில் பாக்ஸ்கான் நிர்வாகம் தனது நிலைபாட்டை மாற்றிக் கொள்ளவில்லை. இதனால் நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர் களின் பணிப் பாதுகாப்பும், எதிர்காலமும் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக தொழில் துறையில் முதலீடு செய்துள்ள பன்னாட்டு நிறுவனங்கள் தமிழக அரசிடம் குறைந்தவிலையில் நிலம், தங்குதடையற்ற மின்சாரம், தண்ணீர், வரி விலக்கு என புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலமாக பல்வேறு வகைகளில் சலுகைகளைப் பெற்று உற்பத்தியை தொடங்கியுள்ளன. இந்த நிறுவனங்களில் 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு படித்த இளம் தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தி மிக குறைந்த ஊதியத்தில் பெரும் லாபத்தை ஈட்டி வருகின்றன.
நிரந்தரத்தன்மையுள்ள பிரிவுகளில் கூட காண்ட்ராக்ட், டிரெய்னி என்ற பெயரில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை பயன்படுத்தி உற்பத்தியில் ஈடுபட்டுள்ளன.இந்த பன்னாட்டு நிறுவனங்களில் பணி பாதுகாப்பு, பணியிட பாதுகாப்பு, சம வேலைக்கு சம ஊதியம், 8மணிநேர வேலை போன்ற தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகள் அமலாவதில்லை. இதை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய தொழிலாளர்துறை, தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் போன்ற அமலாக்கப்பிரிவுகள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கின்றன.
இந்த பின்னணியில் 58 வயது வரை பணிநிரந்தர ஆணை வழங்கிய நிறுவனங்கள் இப்போது 25-28 வயதிலேயே தொழிலாளர்களை பணியிலிருந்து வெளியேற்றுகின்றனர்.பன்னாட்டு நிறுவனங்களுக்கு சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கும் ‘மேக் இன் இண்டியா’ எனும் பிரதமர் மோடியின் முழக்கம் எந்தளவுக்கு ஏமாற்று வேலை என்பதற்கு இந்தச் சம்பவங்களே சாட்சி.பாக்ஸ்கான் நிறுவனத்தின் சட்டவிரோத ஆலை மூடலை எதிர்த்து பாக்கான் இந்தியா தொழிலாளர் சங்கத்தின் சார்பில் 22.12.2014 அன்று நடைபெறும் ஆலை நுழைவு போராட்டத்திற்கு சிஐடியு தமிழ் மாநிலக்குழு முழு ஆதரவை தெரிவித்துக்கொள்கிறது.
அன்றைய தினம் மாவட்ட தலைநகரங்களில் சிஐடியு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்துவது என சிஐடியு மாநிலக்குழு முடிவு செய்துள்ளது.மத்திய, மாநில அரசுகள் பன்னாட்டு நிறுவனங்களில் ஆலைமூடலுக்கு அனுமதி வழங்ககூடாது, வேலை பாதுகாப்பை உத்தரவாதப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டுமென சிஐடியு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.

Friday 12 December 2014

Thursday 11 December 2014

Monday 8 December 2014

அருமைத் தோழர்களே ! நமது BSNLஅதிகாரிகள் + ஊழியர்கள் FORUM-சார்பாக பிரதமருக்கு கீழ்க்கண்ட மனு பொது மக்களிடம் 1 கோடி கையெழுத்து பெற்று சமர்பிக்க வேண்டும் ...
Charter of Demands:
         1.Filling up the posts of CMD/BSNL and Director(Finance) and DIR(HR) of BSNL Board, which are vacant for months.
2.Stop formation of subsidiary companies of BSNL.
3.Compensation for loss on landlines for rural / remote area service.
4.Procurement of equ.t for dev., expansion & better service, more focus on laying OF cable to strengthen the trans.network.
5.Transfer of Assets to BSNL
6.Drop proposal for Merger of BSNL and MTNL.
7.Spectrum Liberalisation and Trading.
8.Pension Contribution on actual basic pay instead of maximum of the pay scale for the employees absorbed from DoT to BSNL.
9.Reject the recommendation of TRAI to force BSNL to surrender 1.2 MHz spectrum in premium 900 MHz band.
10. Reject M/s Deloittee Consultant recommendations
11.Free allotment of spectrum to BSNL
12.Provide financial assistance to BSNL to expand network.
13.BBNL should be merged with BSNL
14.BSNL should start 4G Services.
15.Refund of BWA spectrum charges to BSNL by the Government for the spectrum surrendered by BSNL.
16.78.2% IDA merger fixation for pre-2007 and post-2007 Pensioners.
17.Pension Revision of BSNL Pensioners
18.Fresh Recruitment of Staff.
19.BSNL service to be mandatory to Central Government, State Government and PSUs.
20.Condition of mandatory purchase of equipments from ITI to be scrapped.
21.Implement cabinet decision on 30% superannuation benefits to BSNL direct recruited employees.
Yours faithfully,
--------------------------------------------------------------------------------------------------------------------------
வ.எண்                 பெயர்                                                   பதவி                    கையொப்பம் 
--------------------------------------------------------------------------------------------------------------------------
1.
--------------------------------------------------------------------------------------------------------------------------
2.
--------------------------------------------------------------------------------------------------------------------------
3.
--------------------------------------------------------------------------------------------------------------------------
அருமைத் தோழர்களே ! மக்களை சந்தித்தது 1 கோடி கையெழுத்து பெற்று, பாராளுமன்றத்தை நோக்கி பேரணி நடத்தி, இந்திய  பிரதமரிடம் கோரிக்கை மனுவை சமர்ப்பித்துநமது BSNL நிறுவன பாதுகாப்பிற்காண போராட்டத்திற்கு இப்போதிருந்தே  தயாராகுவோம் 

Thursday 4 December 2014

Monday 1 December 2014

Saturday 29 November 2014

"நூறு ரூபாயாகக் கொடுத்தால் எப்படிப்பா"



இன்று ( நவம்பர் 29) கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் பிறந்தநாள் 
அது ஆகஸ்ட், 1957 ஆம் ஆண்டு. தனது மரணப் படுக்கையில் கிடந்தார் அந்தக் கலைஞர். ராயப்பேட்டை மருத்துவமனை எப்போதுமில்லாத பரபரப்புக் கோலம் பூண்டிருந்தது. அன்றைய ‘இந்து’ ஆங்கில நாளேட்டின் பிரதான பக்கங்களில் அவரது உடல்நிலை குறித்த தகவல்கள் தினசரி கட்டம்போட்டு வந்துகொண்டிருந்தன. தமிழக மக்களின் மனங்களிலெல்லாம் குடிகொண்டிருந்து வாட்டியது கவலை. அவர் உயிர் பிழைக்கவேண்டுமே... அவருக்கு ஒன்றுமாகிவிடாதிருக்க வேண்டுமே என்பதே மக்களின் சிந்தையில் ஓடிக்கொண்டிருந்தது.
மக்களையெல்லாம் மனங்கலங்கச் செய்துகொண்டிருந்த அந்தக் கலைஞன்தான் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன். அவர் நகைச்சுவை நடிகர்தான். ஆனால் மக்களின் மனங்களில் நாயக அந்தஸ்தில் இருந்தவர். ரசிகர்களின் அன்பை அந்தளவுக்குப் பெற்றிருந்த இன்னொரு நகைச்சுவைக் கலைஞன் அந்நாளில் இல்லை. இந்நாளில் மட்டும் என்னவாம்? தனது 49வது வயதிலேயே மரித்துப்போன அந்த மகாகலைஞன் பதித்த தடமென்பது தமிழ்க் கலையுலகில் மட்டுமல்ல, இந்தியாவெங்கிலுமே இணையில்லாதது. இத்தனைக்கும் அவரது கல்வியறிவு என்பது வெறும் நான்காம் வகுப்போடு நின்றுபோன ஒன்றுதான்.
ஆனால் அந்தக் கலை உள்ளம், கல்வி- கேள்விகளில் சிறந்து விளங்கியவர்க்குக்கூட வழிகாட்டுமளவுக்கு உயர்ந்து விளங்கியது. நாடகத்தைப் பார்க்கும் ஆசையில் அந்நாளில் அவரது சொந்த ஊரான நாகர்கோவிலில் முகாமிட்டிருந்த டி.கே.எஸ். சகோதரர்களின் மதுரை ஸ்ரீ பால சண்முகானந்தா சபாவில் சோடா விற்கக் கிளம்பினான் சிறுவனான கிருஷ்ணன். நாடகத்தையும் அதன் பாடல்களையும் கவனித்தான். தினசரி இதே வேலையாக இருந்தான். அதே சமயத்தில் சோடா வியாபாரமும் கனஜோராக நடந்துகொண்டிருந்தது.ஒருநாள் கிருஷ்ணனின் தந்தையார் சுடலைமுத்து அச்சிறுவனை டி.கே.எஸ். சகோதரர்களிடம் கொண்டுபோய் நிறுத்தி, “இவன் நாடகத்தின்பேரில் பெரும் பைத்தியமாக இருக்கிறான்.
இவனைச் சேர்த்துக்கொள்ளுங்கள் ஐயா...” என்றார். புதிதாகச் சேர்ந்த சிறுவர்களுக்குப் பாடம் நடந்துகொண்டிருந்தது. சொல்லிக்கொடுத்துக்கொண்டிருந்தவர் டி.கே. சண்முகம். சங்கரதாஸ் சுவாமிகளின் பாடல் வரிகள்தான் அன்றைய பாடம். இடையில் சண்முகம் எழுந்துசென்று தண்ணீர் அருந்தப் போனார். திரும்ப வந்தவருக்கு வியப்பு. மகரக்கட்டு சாரீரம் கொண்ட ஒரு சிறுவன், தான் விட்ட இடத்திலிருந்து பாடத்தைத் தொடர்ந்துகொண்டிருந்தான். கேட்டார் சண்முகம் : “உனக்கெப்படித் தெரியும் இந்தப் பாட்டு?” சொன்னான் அந்தச் சிறுவன் இப்படி: “நாகர்கோவிலில் உங்கள் நாடகம் நடந்தபோது அங்கே நான் சோடா விற்றுக் கொண்டே பாடம் பண்ணிக்கொண்டேன்!”சண்முகத்துக்கு வியப்பு கலந்த மகிழ்ச்சி. “பலே... இனி நீயே வகுப்பை நடத்து” - சொல்லிவிட்டுச் சென்றார். நாடகக் குழுவில் மாணவனாகச் சேர்ந்த அன்றைக்கே ஆசிரியனாக உயர்ந்த அந்தச் சிறுவன்தான் பின்னாளில் கலைவாணர் என்று கம்பீரம் பெற்ற என்.எஸ்.கிருஷ்ணன். ஒரு கட்டத்தில் கிருஷ்ணன் நடித்தால்தான் நாடகமே ஓடும் என்ற அளவுக்கு அவரது புகழ் ஓங்கியது. அன்றைக்கு சினிமா இருந்தது. ஆனால், அது பேசவில்லை.
அதனால் நாடகக் கலைஞர்களுக்கு அதன்பால் ஈர்ப்பு இல்லை. காலம் ஒருநாள் சினிமாவுக்கும் குரலை வழங்கியது. பேசாப் படத்தின் மீதிருந்த வெறுப்பு மாறி நாடகக் கலைஞர்களை சினிமா ஈர்க்கத்தொடங்கியது. எல்லிஸ் ஆர். டங்கன் எனும் அமெரிக்க சினிமா கலைஞன் தமிழ் மண்ணில் தனது கலை முயற்சியைத் தொடங்க எண்ணி ‘சதி லீலாவதி’ எனும் படத்தை எடுக்கத் திட்டமிட்டிருந்தார். கதை விவாதம் நடந்தது. புதிய கலைஞர்களை நாடக அரங்கிலிருந்து தேர்வு செய்கிற முகாம். அங்கே சினிமா வாய்ப்பு வேண்டி ஏராளமான நாடகக் கலைஞர்கள் குழுமியிருந்தனர். அதில் எம்.கே.ராதா, டி.எஸ்.பாலையா, எம்.ஜி.ராமச்சந்திரன் போன்ற பின்னாளின் நட்சத்திரங்களும் அடக்கம். விவாதம் நகைச்சுவை காட்சிகள் குறித்து நகர்ந்தது. நகைச்சுவை நடிகர்கள் கூட்டத்தில் ஒருவராக அமர்ந்திருந்த என்.எஸ்.கிருஷ்ணன் ஏதோ சொல்ல எழுந்தார். எல்லோரும் பதறினார்கள். கிடைக்கப்போகிற சினிமா வாய்ப்பை இவன் ஏதாவது சொல்லப்போய்க் கெடுத்துவிடுவானோ? கிருஷ்ணனின் சட்டையைப் பின்பக்கமிருந்தவர் பிடித்து இழுத்தார். கிருஷ்ணன் முண்டினார். “நகைச்சுவைக் காட்சி பற்றி விவாதிக்கிறபோது என் மனதில் பட்டதை நான் சொல்ல வேண்டாமா?” - வினா தொடுத்தார். தமிழறியாத இயக்குநர் டங்கன் அருகிலிருந்தவரிடம் விசாரித்தார். “அவர் என்ன சொல்ல வருகிறார்? அவரைப் பேச விடுங்கள்...” கிருஷ்ணன் கம்பீரமாகச் சொன்னார்: “நான் நடிக்கும் நகைச்சுவைக் காட்சிகளை நான் சொல்கிறபடிதான் எடுக்க வேண்டும்..!” வியந்துபோனார் டங்கன். துணிச்சலான அந்தப் பேச்சு அவரிடம் திறமையிருப்பதை டங்கனுக்கு உணர்த்தியது. டங்கன் பதில் சொன்னார், “சரி, நீங்கள் நடிக்கும் நகைச்சுவைக் காட்சிகளை நீங்கள் சொல்கிற விதத்திலேயே எடுப்போம்“.நாடகத்தில் எப்படி மாணவனாகச் சேர்ந்த முதல்நாளே ஆசிரியரானாரோ அதேபோல சினிமாவில் முதல் வாய்ப்பு கிடைத்தபோதே துணிவோடு குரலெழுப்பி, தனது நகைச்சுவைக் காட்சிக்கு தானேபொறுப்பென்ற உரிமையைப் பெற்றார்.
இப்படியொரு தனித்துவக் கலைஞனாக அவர் விளங்கியதாலேயே தனது நகைச்சுவைக் காட்சிகளிலாகட்டும், பாடல்களிலாகட்டும் சமூக சீர்திருத்தக் கருத்துக்களை அவரால் தாராளமாக முன்வைக்க முடிந்தது. உலகத்துக்கு ஒரு சாப்ளின் என்றால் தமிழுக்கு, இந்தியாவுக்கு ஒரு கலைவாணர் என்று ஆனார். எண்ணற்ற கலைஞர்கள் அவருக்கு நிழல்போல இருந்தனர். அவரது காதல் மனைவி டி.ஏ. மதுரம் கலையுலகிலும் அவரது இணையாக ஈடுகொடுத்துச் சாதனை புரிந்தார். அவரது உள்ளமறிந்த கவிவாணராக உடுமலை நாராயண கவி அவருக்கேயான தனித்துவமிக்க பாடல்களை இயற்றித் தந்துகொண்டேயிருந்தார். இந்த இணையற்ற கூட்டணி சினிமாவின் நகைச்சுவைக்கு ஒரு பண்பாட்டு ஞான அறச்சாலையின் அந்தஸ்தை வழங்கியது. கலைவாணர் சிரிக்க வைத்து நாட்டைச் செழிக்க வைத்தார்.
அன்றைக்கு சினிமாக்காரர்களுக்கு இருந்த ‘கூத்தாடிகள்’ என்ற இழிச்சொல்லை மாற்றி, ‘கலைஞர்கள்’ என்ற கௌரவத்தைப் பெற்றுத்தந்தது அவரது உன்னதக் கலை. தந்தை பெரியாரின் பகுத்தறிவுச் சிந்தனையை, பொதுவுடைமை இயக்கத்தின் சமுதாய சமத்துவக் கருத்துக்களை, காந்தி மகாத்மாவின் தனி மனித ஒழுக்க விழுமியங்களை ஒருசேர உள்வாங்கிக்கொண்ட கலைவாணர் அந்தக் கருத்துக்களையெல்லாம் தனது கலையின் வாயிலாக மக்களுக்கு வழங்கி மகிழ்ந்தார். “நானும் சீர்திருத்தக் கருத்துக்களைச் சொல்கிறேன். கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனும் சொல்கிறார். நான் சொல்லும்போது அழுகிய முட்டையையும் நாற்காலிகளையும் வீசி எறிகிற ஜனங்கள் கிருஷ்ணன் சொன்னால் காசு கொடுத்துக் கேட்டு கை தட்டி ரசித்துச் சிரிச்சுட்டுப் போகிறார்கள். அந்த வகையில் என்னைவிட அவர் ஒசந்துட்டார்” இப்படியொரு பிள்ளையுள்ளத்தோடு கலைவாணரைப் பாராட்டியவர் தந்தை பெரியார்.
அத்தோடு நின்றுவிடவில்லை கலைவாணர். தான் ஈட்டிய பொருளையெல்லாம் இல்லையென்று வந்தவருக்கெல்லாம் அள்ளி அள்ளிக் கொடுத்தார். தன் வீட்டில் திருட வந்தவனுக்கும்கூட அவரது கருணைப் பார்வை கிடைத்தது. அவனுக்கும் அள்ளித்தந்துவிட்டே மனந்திருந்த அறிவுறுத்தினார். “உனக்கு எவன் கிருஷ்ணன் என்று பெயர் வைத்தது? உனக்குக் கர்ணன் என்றுதான் பெயர் வைத்திருக்க வேண்டும்“ - என்று வருமானவரி அதிகாரியொருவரே நெகிழ்ந்து அவரைப் புகழ்ந்தார். தனது 49 ஆம் வயதில் மரணத்தைத் தழுவுகிற வரையிலும் இந்தக் கொடைகுணம் அவரிடம் தொடர்ந்தது. அப்போது அவருக்கு வறுமை. கொடுத்தால் வாங்கமாட்டார் எனத் தெரிந்து, மருத்துவமனைப் படுக்கையுள் தனக்கே தெரியாமல் எம்.ஜி.ஆர். வைத்துவிட்டுப்போன நூறு ரூபாய்க் கத்தையினை எடுத்துக்கொண்டு எம்.ஜி.ஆரிடமே சண்டை பிடித்தார் இப்படி: “நூறு ரூபாயாகக் கொடுத்தால் எப்படிப்பா... கொஞ்சம் சில்லரையாக மாற்றித்தந்தால் வருகிறவர்களுக்கெல்லாம் தருவேனே...” தனக்காகத் தரப்பட்ட பணத்தையும் அவர் இப்படித்தான் பயன்படுத்த நினைத்தார், வறுமையின் பிடியிலிருந்தபோதிலும். எல்லோரையும் சிரிக்க வைத்தார், மூடத்தனங்களுக்கு எதிராக சிந்திக்க வைத்தார், அதனால் கிட்டிய பொருளையெல்லாம் இல்லாதவர்க்குக் கொடுத்து தானும் மகிழ்ந்து சிரித்தார். அதனால்தான் அவர் நூறாண்டுகளைக் கடந்தும் தமிழ் ரசிகர்களின் மனங்களிலெல்லாம் இன்னமும் வாழ்ந்துகொண்டிருக்கிறார்.

கலைவாணருக்கு நிகர் கலைவாணரே என்றுதான் சொல்ல வேண்டும். சக மனிதனை இழிவு செய்யாத, ஊனத்தைக் கிண்டலடிக்காத, பெண்ணைக் கீழ்த்தரமாகக் கொச்சைப் படுத்தாத, இரட்டை அர்த்த வசனத்தை நம்பிக் கடை விரிக்காத அதி உன்னத நகைச்சுவை அவருடையது. கலைவாணரின் இந்த அளவுகோலை வைத்து இன்றைய நகைச்சுவைக் காட்சிகளை எடை போட்டால் எதுதான் அந்தத் தரத்தோடு நமக்கு மிஞ்சும் சொல்லுங்கள்? கலைவாணர் கலைவாணர்தான்

Monday 24 November 2014


பொதுத்துறையை சூறையாடத் 

திட்டம்


புதுதில்லி, நவ. 23-
இரண்டாம் கட்ட பொருளாதாரச் சீர்திருத்தங்களாக பொதுத்துறை மேலும் பெரிய அளவில் திறந்துவிடப்படும், காப்பீடு மற்றும் நிலச்சட்டங்கள் எவ்வளவு எதிர்ப்பு இருந்தாலும் அமல்படுத்தப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். தில்லியில் ஞாயிறன்று பத்திரிகையாளர்களிடம் அருண் ஜெட்லி பேசியபோது கூறியதாவது:நாட்டின் முன்னேற்றத்திற்கு பொருளாதாரச் சீர்திருத்தங்கள் எப்போதும் தடை படக்கூடாது என்பதில் பாஜக அரசு தெளிவுடன் இருக்கிறது. இதற்காக இரண்டாம் கட்ட பொருளாதார சீர்திருத்தங்கள் விரைவில் அமல்படுத்தப்படும். இரண்டாம் கட்டபொருளாதாரச் சீர்திருத்தங்க ளாக நாட்டின் பொதுத்துறைகள் இன்னும் பெரியதாக திறந்து விடப்பட வேண்டும்.
காப்பீடு,ரயில்வேத்துறை, பாதுகாப்புத் துறை போன்றவற்றில் அந்நிய முதலீடுகள் தாராளமாக வரவேற்கப் படுகின்றன. இவ்வளவு பெரியஅளவில் திறந்துவிடப்படும்போது தொழில் தொடங்க தடையாக நிலம் கையகப்படுத்துதல் சட்டடங்கள் மற்றும் எதிர்ப்புகள் இருக்கக்கூடாது. கார்ப்பரேட்டுகள் தொழில் தொடங்கவும் பல்வேறு கம்பெனிகள் தொழிற்சாலை தொடங்கவும் தடையாக நிலம் கையகப்படுத்துதல் சட்டம், நிலக்கரிச் சுரங்கம் தோண்டுவது குறித்த சட்டம்வரிச்சட்டம், காப்பீடு சட்டம் போன்றவை உள்ளன. இவை வளர்ச்சிக்குத் தடையாக உள்ள காலாவதியாகிப்போன சட்டங்கள் என்பதால் இவை ஒவ்வொன் றாக நீக்கப்பட வேண்டும் என்றார். முதலீட்டாளர்கள் இங்கு தொழில் தொடங்க நிலையான அரசியல், கொள்கை மற்றும் வரி விதிப்பு முறை இருக்க வேண்டும்இங்கு அப்படி இல்லாத நிலையைவிரைவில் மாற்றுவோம். பொதுத் துறையை பெரிய அளவில் திறந்துவிட்டு முதலீடுகள் மலிவாக இல்லாவிட்டால் எந்தப் பயனும்இல்லை. பட்ஜெட் போட்டுத் தான் பொருளாதாரச் சீர்திருத்தங்களை நிறைவேற்ற வேண்டும் என்பதில்லை. பட்ஜெட் என்பது ஒரு வாய்ப்புதான். நிலம் கையகப்படுத்தப்படும் போது அதிக அளவில் நட்ட ஈடுஅளிப்பது பிரச்சனையில்லை. ஆனால் நிலம் கையகப்படுத்த வில்லை எனில் கட்டுமானம், நகரங்கள், வீடுகள் கட்டுவது மற்றும் வேலை வாய்ப்புகள் போன்றவை பிரச்சனையாகி விடும்.
சிலிண்டர்களுக்கான மானியங்கள் அளிப்பதைப் பொறுத்தவரை இரு நாட்களுக்கு முன்னதாக கூறியதையே உறுதிப்படுத்து கிறேன். வசதியுள்ளவர்களுக்கு மானிய விலையில் சிலிண்டர் அளிப்பதை ரத்து செய்வதற்கு சில எதிர்ப்புகளை நாங்கள் எதிர்கொள்வோம் என்று எங்களுக்கு தெரியும்.பொது விநியோக முறையைரத்து செய்வதைப் பொறுத்த வரை இதற்காக பிமல் ஜெயின் என்பவரின் தலைமையில் அமைக்கப்பட்ட செலவினங்கள் மேலாண்மை கமிஷன் இப்பிரச்சனையை ஆராய்ந்து வருகிறது. பொது விநியோக முறையில் வழங்கப்படும் உணவு, உரங்கள் மற்றும் எண்ணெய்க்காக அளிக்கப்படும் மானியங்களை குறைப்பதற்கும் இதனால் பட்ஜெட்டில் ஏற்படும் பற்றாக்குறையை சரி செய்யவும் அந்த கமிஷன் ஆராய்ந்து வருகிறது.
விரைவில் அந்த கமிஷனின் பரிந்துரையின்படி முடிவு எடுக்கப்படும். இவ்வாறு அருண் ஜெட்லி கூறியுள்ளார். அருண் ஜெட்லி தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சராகவும் உள்ளார்.
எப்.எம்.வானொலி
இத்துறையை விரிவுபடுத்து வது தொடர்பாக பத்திரிகையாளரின் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அவர் மத்திய அரசு800 எப்.எம்.வானொலி சேவை களுக்கு அனுமதி அளிக்கும் என்றுகூறியுள்ளார்.

Thursday 20 November 2014

Wednesday 19 November 2014

17.11.2014 அன்று சிவகங்கையில் நடைபெற்ற மாவட்ட செயற்குழு முடிவுகள்

நவ-27 போராட்டத்தில் அனைவரும் கலந்துகொண்டு, அனைவரையும் கலந்துகொள்ளவைத்து நூறு சதம் வெற்றி அடையச்செய்வது
---------------------------------------------------------
18ந் தேதி மாலை காரைக்குடியில் பொ.மே அலுவலக வளாகத்தில் JAC சார்பில் நடைபெறும் சிறப்பு கூட்டத்தில் பங்கேற்பது
---------------------------------------------------------
இருபதாம் தேதி முதல் நடைபெற இருக்கிற வாயில் கூட்டங்களை அனைத்து ஊர்களிலும் சிறப்பாக நடத்துவது
---------------------------------------------------------
மாவட்டதிற்குள் விருப்ப மாறுதலுக்காக நீண்ட காலமாக காத்திருப்போர்களின் மாறுதல்களை, வரிசைப்பட்டியலின்படி, உத்திரவிட நிர்வாகத்தை வலியுறுத்துவது
-----------------------------------------------------
இன்னமும் NEPP வழங்கப்படாமல் உள்ள தோழர்களுக்கு அதனை உடனடியாக வழங்க ஏற்பாடு செய்வது
---------------------------------------------------------

தரம் குறைந்த பேட்டரிகளினால் மாவட்டத்தில் பல தொலைபேசி நிலையங்கள் மணிக்கணக்கில், நாட்கணக்கில் செயல் இழக்க நேரிடுகிறது. இது நமது கம்பெனிக்கு மாபெரும் இழப்பு. தரமான பேட்டரிகள் வாங்கும்படி நிர்வாகத்தை நிர்ப்பந்தம் செய்வது

Tuesday 18 November 2014

சட்டங்களை ஒழிப்பேன்


சிட்னி, நவ.17-
இந்தியாவுக்குள் அந்நியர்கள் தாராள மாக நுழைவதற்கு தடையாக இருக்கும் சட்டங் கள் அனைத்தையும் ஒழித்துக் கட்டுவேன் என பிரதமர் நரேந்திரமோடி கொக்கரித்தார். மேலும், ரயில்வேத் துறையில் 100 சதவீதம் அந்நிய பெருமுதலாளிகளை அனுமதிக்க காத்திருப்பதாகவும் அவர் கூறினார்.ஜி20 உச்சி மாநாட்டையொட்டி ஆஸ் திரேலியா பயணம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திரமோடி, அந்நாட்டின் தலைநகர் சிட்னியில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் சார்பில் அளிக்கப்பட்ட வரவேற்புக் கூட்டத் தில் பேசினார்.இந்தக் கூட்டத்தை பற்றி ஏற்கெனவே திட்டமிட்டப்படி இந்திய ஊடகங்கள் வானளாவ புகழ்ந்து ஊதித் தள்ளியுள்ளன. அக்கூட்டத்தில் மோடி பேசிய விதம் குறித் தும், கிடைத்த வரவேற்பு குறித்தும் பக்கம் பக்கமாக எழுதி வருகின்றன. அதே நேரத்தில் அக்கூட்டத்தில் ஒட்டுமொத்த இந்திய மக்க ளுக்கும் எதிரான பல அறிவிப்புகளை மோடிவெளியிட்டது குறித்து ஒருவரி செய்தியாக வெளியிட்டுள்ளன.
சிட்னி கூட்டத்தில் பேசிய மோடி, இந்தியாவில் ‘ஜன்தன்’ என்ற திட்டத்தை தான் துவக்கியது பற்றி பெருமிதத்துடன் குறிப்பிட்டுக் கொண்டார். இந்திய ரிசர்வ்வங்கியுடன் இதுபற்றி முதலில் ஆலோசித்த போது, இத்திட்டத்தை நிறைவேற்ற 3 ஆண்டுகள் ஆகும் எனக் கூறியதாக தெரி வித்தார். ஆனால், வெறும் 150 நாட்களில் தனது முன்முயற்சியால் திட்டம் நிறைவேற் றப்பட்டுவிட்டதாகவும், கடந்த 10 வாரங் களில் மட்டும் சுமார் 7 கோடி வங்கிக் கணக்கு கள் துவக்கப்பட்டுவிட்டதாகவும் கூறினார்.
ஆனால் இந்த திட்டம், படிப்படியாக இந்திய ஏழைகளுக்கான மானியங்களை அவர்களுக்கே தெரியாமல் மொத்தமாக பறிப்பதற்கான திட்டம் என்பதை அவர் குறிப்பிடவில்லை.ரயில்வேத் துறையில் 100 சதவீதம் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிக்க தமது அரசு தயாராக இருப்பதாக மோடி பகிரங்கமாக அறிவித்தார். இந்திய ரயில்வேத் துறை என்பது அந்நிய பெருமுதலாளிகளுக்கு ஒரு பிரம்மாண்டமான ஒரு சந்தை என்றும், அதை மிகப் பெரிய அளவிற்கு பயன்படுத்திக் கொண்டால் பெரும் லாபம் சம்பாதிக்கலாம் என்றும் மோடி குறிப்பிட்டார்.
அந்நிய பெருமுதலாளிகளுக்காக உழைப்பதற்கு இந்தியாவில் மிகப் பெரிய அளவில் தொழி லாளர் சந்தை இருக்கிறது என்று கூறிய மோடி, எனினும் அவர்களது திறனை மேம்படுத்த வேண்டியது அவசியமாக உள்ளது என்றும் கூறினார்.மேலும், முந்தைய காங்கிரஸ் கூட்டணி அரசு புதிது புதிதாக சட்டங்களை உருவாக்கு வதில் மகிழ்ச்சியடைந்தது எனக் குறிப்பிட்ட மோடி, “ஆனால் என்னை பொறுத்தவரை சட்டங்களை ஒழிப்பதில்தான் மகிழ்ச்சி யடைகிறேன். ஏராளமான சட்டங்களை ரத்துசெய்வேன்; அதன்மூலம் சுத்தமான காற்று உள்ளே வரட்டும்” என்று கூறினார். அவர் சுத்தமான காற்று என்று குறிப்பிட்டது இந்திய சட்ட விதிகளால் உள்ளே வர முடியாமல் தடைப்பட்டு நிற்கும் அந்நிய பெருமுதலாளிகளே என்பது கவனிக்கத்தக்கது.

Saturday 15 November 2014


நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யரின் நூற்றாண்டு பிறந்த நாளையொட்டி கொச்சியில் உள்ள அவரது இல்லத்திற்கு நேரில் சென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள மாநில செயலாளர் பினராயி விஜயன்பூச்செண்டு அளித்து மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டார்.


நீதிமானுக்கு வயது 100
உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யரின் 100வது பிறந்த நாள் விழா கொச்சியிலுள்ள அவரது இல்லத்தில் நீதிபதிகள், வழக்கறிஞர்கள், மனித உரிமை மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டது.1915ம் ஆண்டு பாலக்காட்டில் உள்ள வைத்தியநாதபுரத்தில் ஒரு எளிய தமிழர் குடும்பத்தில் பிறந்த வி.ஆர்.கிருஷ்ணய்யர், இளமைப்பருவத்தின் தொடக்கத்திலிருந்தே சமூக ஆர்வலராகவும் அடித்தள மக்களிடம் அன்புள்ளம் கொண்டவராகவும் இருந்தார்.
வழக்கறிஞராக வாழ்க்கையை தொடங்கிய கிருஷ்ணய்யர் சமூகத்தில் உள்ள நலிந்த பிரிவினர் மற்றும் தொழிலாளர்களுக்காக வழக்குகளை நடத்தினார்.1957ம் ஆண்டு கேரள மாநிலத்தில் தோழர் இஎம்எஸ் தலைமையில் அமைந்த கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியின் அமைச்சரவையில் சட்டம், மின்சாரம், சிறைத்துறை மற்றும் சமூக நலத்துறை ஆகிய துறைகளுக்கு அமைச்சராக பதவி வகித்தார். 1968ல் கேரள உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக பதவி வகித்தார்.

இதனைத் தொடர்ந்து 1973ல் உச்சநீதிமன்றத்தில் நீதிபதியாக பதவி ஏற்றார். 7 ஆண்டுகளாக உச்சநீதிமன்றத்தின் நீதிபதியாக பதவி வகித்த அவர் எண்ணற்ற நூல்களை எழுதியுள்ளார். பத்மபூஷன் விருது உள்ளிட்டு 20ற்கும் மேற்பட்ட விருதுகளை பெற்றுள்ளார்.நீதிபதியாக இவர் அளித்த தீர்ப்புகள் இன்றும் நீதிபதிகள் வழக்கறிஞர்கள் மற்றும் மனித உரிமை காப்பாளர்களுக்கு வழிகாட்டியாக உள்ளன.பிரதமர் நரேந்திர மோடியும் வாழ்த்து தெரிவித்துள்ளார். முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் நேரில் சென்று வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.